தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரினால் கைது

குதிரமலை கடல் பகுதியில் 2019 நவம்பர் 04 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வட மேற்கு கடற்படை கட்டளை மூலம் குதிரமலை கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 06 நபர்கள் கைது செய்யப்பட்டனர். அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு மீன்பிடி படகு, ஒரு வெளிப்புற மோட்டார் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1000 கிலோ கிராம் மீன் மற்றும் ஒரு தடைசெய்யப்பட்ட வலை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் 26 முதல் 37 வயது வரையிலான அறிப்பு பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன.கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகு, வெளிப்புற மோட்டார் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 1000 கிலோ கிராம் மீன் மற்றும் தடைசெய்யப்பட்ட வலை ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.