சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கடற்படையால் கைது

உடப்பு கடல் பகுதியில் இன்று (நவம்பர் 05) கடற்படையால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 600 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இரண்டு (02) நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளை புத்தலம் உடப்பு கடல் பகுதியில் நடத்திய ரோந்துப்பணியின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன், மேலும் குறித்த படகு சோதனை செய்த போது இந்த பி.டி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. பீடி இலைகளுடன் இரண்டு நபர்களும் ஒரு டிங்கி படகும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. சந்தேக நபர்கள் 26 மற்றும் 31 வயதுடைய புல்மூட்டை மற்றும் கண்டக்குலிய பகுதியில் வசிப்பவர்கள் எனக் கூறப்படுகிறது, இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக சின்னப்பாடு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும் கடற்படை அடிக்கடி மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக, நாட்டிற்குள் கடத்த முயன்ற ஏராளமான போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சட்டவிரோத கடத்தலை எதிர்த்து கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்கிறது.