சட்டவிரோத துப்பாக்கி யொன்று மற்றும் கஞ்சா கன்றுகள் வைத்திருந்த ஒருவர் ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து 2019 நவம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கீகரிக்கப்படாத 12 துளை துப்பாக்கி, 12 துளை தோட்டாக்கள் மற்றும் கஞ்சா கன்றுகளை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

தெற்கு கடற்படை கட்டளை மற்றும் கொன்னோருவ பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஹம்பாந்தோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் காணப்பட்டார். குறித்த நபரை மேலும் சோதனை செய்த போது 12 துளை துப்பாக்கி, 12 துளை தோட்டாக்கள் மற்றும் கஞ்சா கன்றுகளை கண்டுபிடிக்கப்பட்டன, அதன்படி அவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர் 53 வயதான ஹம்பாந்தோட்டை பகுதியில் வசிப்பவர் என கண்டரியப்பட்டார். சந்தேகநபர், 12 துளை துப்பாக்கி, 12 துளை தோட்டாக்கள் மற்றும் கஞ்சா கன்றுகள் மேலதிக விசாரணைக்காக ஹம்பாந்தோட்டை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.