சங்குகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் மன்னார் பிரதேச கட்டுப்பாட்டு பிரிவு இனைந்து 2019 நவம்பர் 06 ஆம் திகதி மன்னார் இருக்குளம்பிண்டி பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக 2432 சங்குகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் மன்னார் பிரதேச கட்டுப்பாட்டு பிரிவு ஆகியவை மன்னார் இருக்குளம்பிண்டி பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட இந்த சங்குகளுடன் ஒருவர் கைது செய்யபட்டார். கைது செய்யப்பட்ட நபர் இருக்குளம்பிண்டி பகுதியில் வசிக்கும் 30 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர் மற்றும் சங்குகள் மன்னார் பிரதேச கட்டுப்பாட்டு பிரிவுக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும், மீன்வள மற்றும் நீர்வளச் சட்டத்தின்படி, 70 மி.மீ க்கு குறைவான விட்டம் கொண்ட சங்கு களை விற்பனை செய்தல், கொண்டு செல்வது அல்லது ஏற்றுமதி செய்வதற்கான நோக்கத்துடன் வாங்குவது, காண்பிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது.