போதைப்பொருள் வைத்திருந்த ஐந்து பேர் கடற்படையால் கைது

மன்னார், பெரியகரசால் பகுதியில் 2019 நவம்பர் 06 ஆம் திகதி கடற்படையால் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 335 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 2910 மில்லிகிராம் கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளை மன்னார் பெரியகரசால் பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது பாதையில் சென்று கொண்டிருந்த ஐந்து சந்தேக நபர்களை கண்கானித்தனர். அவர்களை மேலும் சோதனையிட்ட போது குறித்த ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா கண்டுபிடிக்க்பட்டன. அங்கு இந்த சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் 26 முதல் 39 வயதுக்குட்பட்ட மன்னர், தலைமன்னார், பெசாலை மற்றும் கல்பிட்டி ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள், ஹெராயின் மற்றும் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.