தடைசெய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து இன்று (செப்டம்பர் 07) யாழ்ப்பாணம் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட 38 மீன்பிடி வலைகளைக் கொண்ட ஒருவரை கைது செய்யப்பட்டார்.

அதன்படி வடக்கு கடற்படை கட்டளை மற்றும் யாழ்ப்பாணம் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் ஒருங்கிணைந்து யாழ்ப்பாணம் பகுதியில் நடத்திய சோதனையின் போது விற்பனைக்காக வைத்திருந்த 38 வலைகளுடன் ஒருவர் இவ்வாரு கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் 62 வயதானவர் என கண்டரியப்பட்டன. சந்தேக நபர் மற்றும் மீன்பிடி வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.