சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இனைந்து 2019 நவம்பர் 07 ஆம் திகதி மித்தெனிய பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 1200 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி,தெற்கு கடற்படை கட்டளை மற்றும் அம்பலன்கொடை பொலிஸ் விசேட அதிரடிப் படை இனைந்து மித்தெனிய பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 60 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகள் முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு கடற்படையினர் 1200 சிகரெட்டுகளை மீட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் வீரகெடிய பகுதியில் வசிக்கின்ற 40 வயதானவர் என கண்டரியப்பட்டுள்ளதுடன். இந்த சம்பவம் குறித்து மித்தெனிய போலீஸ் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.