நல்லிணக்க திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட “கிராம சக்தி” கட்டிடம் திறக்கப்பட்டது

ஊர்காவற்துறை நாரந்தனாய் பகுதியில் கடற்படையின் உதவியுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'கிராம சக்தி' கட்டிடம், ஊர்காவற்துறை, பிரதேச செயலாளர் திருமதி மஞ்சுலாதேவி சதீசன் அவர்களால் 2019 நவம்பர் 7, அன்று திறந்து வைக்கப்பட்டது.

அதன்படி, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் 'நல்லிணக்கம்' என்ற கருத்தின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையை ஒரு சமூக சேவையாக இந்த கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டதுடன். இக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளுக்கு வழங்கிய பங்களிப்புக்காக கடற்படைத் தளபதி உட்பட முழு கடற்படைக்கும் பிரதேச செயலாளர் மற்றும், அப்பகுதி மக்கள் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வுக்காக இலங்கை கடற்படை கப்பல் கந்சதேவ நிருவனத்தின் கடற்படையினர் மற்றும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.