ஹெரொயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கடற்படையால் கைது

980 மில்லிகிராம் ஹெரொயின் கொண்ட மூன்று நபர்கள் 2019 நவம்பர் 7 ஆம் திகதி ரம்பேவ பகுதியில் கடற்படை மற்றும் போலீஸ் சிறப்பு பணிக்குழு நடத்திய சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளை மற்றும் செட்டிக்குளம் போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கரொன்று கண்கானித்தனர். குறித்த மோட்டார் சைக்களை மேலும் சோதனை செய்த போது அங்கு இருந்து விற்பனைக்காக கொண்டு செல்லும் 980 மில்லிகிராம் ஹெரொயின் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த ஹெரொயின் பொதி, சந்தேக நபர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனுராதபுரம் பகுதியில் வசிக்கின்ற 26 முதல் 41 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஹெரொயின் பொதி மேலதிக விசாரணைகளுக்காக மெதவச்சிய போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.