தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கடற்படையால் கைது

திருகோணமலை,நோர்வே தீவு கடல் பகுதியில் 2019 நவம்பர் 07 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளை மூலம் நோர்வே தீவு கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த நபர்களை கைது செய்யப்பட்டது. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரு மீன்பிடி படகுகள், இரு வெளிப்புற மோட்டார்கள், இரு தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் மீன்பிடி பொருட்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் 21 முதல் 47 வயது வரையிலான கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகுகள், வெளிப்புற மோட்டார்கள், சட்டவிரோத வலைகள் மற்றும் பிர மீன்பிடி பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.