மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட பல ரவைகள் கடற்படை மீட்டுள்ளது

கடற்படை மற்றும் எராவூர் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து 2019 நவம்பர் 07 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல ரவைகள் கண்டுபிடித்தனர்.

அதன் படி, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் எராவூர் பொலீஸ் அதிரடிப்படையினர் ஒருங்கிணைந்து எராவூர் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது டி -56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் மிமீ 7.62 x 39 மிமீ கொண்ட 70 ரவைகள் மீட்டனர்.

அதே நாளில் கிழக்கு கடற்படை கட்டளை மூலம் பூம்பூஹார் கடற்கரையில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கை துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படுகின்ற 9 x 19 வகையில் 1066 ரவைகள் கண்டுபிடித்தனர்.

குறித்த ரவைகள் பற்றிய மேலதிக விசாரணைகள் கடற்படை மற்றும் எராவூர் காவல்துறை மேற்கொண்டு வருகின்றன. மேலும், மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த குண்டுகள் பயங்கரவாதிகளால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது