மூன்று கிலோகிராம் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த நபர் கடற்படையால் கைது

கடற்படை மற்றும் பட்டியபொல போலீஸ் சிறப்பு பணிக்குழு இனைந்து ரன்ன பகுதியில் 2019 நவம்பர் 8 ஆம் திகதி மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது மூன்று (3) கிலோகிராம் உள்ளூர் கஞ்சாவை வைத்திருந்த ஒருவர் கைது செய்ப்பட்டார்.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளை மற்றும் பட்டியபொல போலீஸ் சிறப்பு பணிக்குழு ரன்ன பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது ஒரு சந்தேக நபரை கண்கானித்தனர். அவரை மேலும் பரிசோதித்த போது குறித்த கஞ்சாவை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்ட உள்ளூர் கஞ்சா பொதி மற்றும் சந்தேக நபர் கடற்படையால் கைது செய்யப்ட்டதுடன் சந்தேக நபர் அம்பலண்தோட்டை பகுதியில் வசிக்கும் 22 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர் மற்றும் கஞ்சா ஹுங்கம போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.