தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கடற்படையால் கைது

திருகோணமலை, எலிசபேத் தீவு கடல் பகுதியில் 2019 நவம்பர் 10 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிழக்கு கடற்படை கட்டளை மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்த நபர்களை கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் 31 முதல் 46 வயது வரையிலான கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன. அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய ஒரு மீன்பிடி படகு, ஒரு வெளிப்புற மோட்டார், 225 நீளமான ஒரு தடைசெய்யப்பட்ட வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகு, வெளிப்புற மோட்டார், சட்டவிரோத வலை மற்றும் பிற மீன்பிடி பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவதால் கடல் சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தின் மீன் மற்றும் கடல் வளங்களை பாதுகாக்க கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.