"யாழ்ப்பாணம் உணவு விழா" - 2019 வடக்கு கடற்படை கட்டளையில்

"யாழ்ப்பாணம் உணவு விழா 2019" என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட சமையல் போட்டி 2019 நவம்பர் 9 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிறுவனத்தில் நடைபெற்றது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான அனைத்து நிருவனங்கள், கப்பல்கள் மற்றும் படகுகள் திருவிழாவில் பங்கேற்றன. வடக்கு கடற்படை கட்டளையின் கடல் பணியாளர்களின் சமையல் திறன் மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் ஈடுபடுவோரின் திறன்கள், கூட்டு செயல்திறன் மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமானது.

ஒவ்வொரு அணியும் கவர்ச்சியையும் போட்டித்தன்மையையும் பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டியது, இதன் விளைவாக நிகழ்வை வெற்றிகரமாக முடித்தனர். பிரதம விருந்தினராக துணைப் தலமை பணியாளர்கள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இலங்கை இராணுவம், விமானப்படை, காவல்துறை மற்றும் பிற அரசு நிறுவனங்கள் மற்றும் கடற்படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பலவிதமான நிகழ்வுகளிலிருந்து, வடக்கு கடற்படையைக் குறிக்கும் வேக படகுகள் பிரிவு ஒட்டுமொத்த செயல்திறனைப் பொறுத்தவரை சிறந்த அணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. போட்டியில் சிறந்து விளங்கியவர்களுக்கு , துணைப் தலமை பணியாளர் பரிசுகளை வழங்கினர்.