தலாதுடுவ ஆரன்ய சேனாசனயக்கு கல் புத்தர் சிலையை கொண்டு வர கடற்படை உதவி

கடற்படை, 2019 நவம்பர் 10, அன்று, காலி கொக்கல ஓய தீவில் அமைந்துள்ள தலாதுடுவ ஆரன்ய சேனாசனயக்கு ஒரு கல் சமாதி புத்தர் சிலையை கொண்டு வர உதவி வழங்கியது.

ஆரன்ய சேனாசனய தாயக சபாவின் வேண்டுகோளின் பேரில், இந்த சிறப்பான பணி தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சுழ்யோடி குழுவினால் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கல் புத்தர் சிலை கொக்கல விமானப்படை தள ஜெட்டியில் இருந்து கொக்கல ஒய ஊடாக தலாதுடுவ ஆரன்ய சேனாசனயக்கு கடற்படையால் கொண்டு வரப்பட்டது.

இந்த சிறப்பான செயலை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படையின் பங்களிப்பை தலாதுடுவ ஆரன்ய சேனாசனயத்தின் வணக்கத்திற்குரிய எல்லே இந்தசோபித தேரர் மற்றும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பாராட்டினர்.