கடற்படை மற்றும் கடலோர காவல்படை மெற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது பீடி இலைகளுடன் மூன்று இந்தியர்கள் கைது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இன்று (2019 நவம்பர் 12) வட மேற்கு கடல் பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் பொது பீடி இலைகளுடன் மூன்று இந்தியர்கள் செய்யப்பட்டனர்.

அதன்படி, கற்பிட்டி, குதிரைமலை கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான சிறிய மீன்பிடி படகொன்றை கடற்படை கவனித்துள்ளதுடன், குறித்த சிறிய மீன்பிடிக் படகை ஆய்வு செய்ய இலங்கை கடலோர காவல்படையின் கப்பலொன்று இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு சந்தேகத்திற்கிடமான படகு சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்த இந்திய படகொன்று என்பது தெரியவந்தது. மேலும் மேற்கொண்ட சோதனையின் போது படகு உள்ளே சுமார் 1000 கிலோகிராம் பி.டி இலைகள் அடங்கிய 33 பொட்டலங்கள் மற்றும் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 26 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் பீடி இலைகள் கடல் வழியாக கொண்டு வரப்பட்டு இந்த நாட்டில் மோசடிகாரர்களுக்கு ஒப்படைக்க முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பீடி இலைகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளது. இந்த படகு மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடற்படையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும்,சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லையை மீறுகின்ற காரணத்தினால் சமீப காலத்தில் பல சந்தர்ப்பங்களில் இந்திய மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். கடல்சார் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை கடற்படை தொடர்ந்து கடற்படையின் வளங்களை பயன்படுத்துகிறது.மேலும் இலங்கை கடலோர பாதுகாப்புத் துறையின் உதவியுடன், இந்த நடவடிக்கைகள் கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் மற்றும் நாட்டுக்குள் மேற்கொன்டுள்ள செயல்பாடுகள் மூலம் சுமார் 50 டன் சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.