மூன்று போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து 2019 நவம்பர் 13 ஆம் திகதி கிரிபத்கொடை பகுதியில் கேரள கஞ்சாவுடன் மூன்று பேரை கைது செய்தனர்.

மேற்கு கடற்படை கட்டளை, போலீஸ் குற்றத் தடுப்பு பிரிவு மற்றும் போலீஸ் அதிரடிப்படை இனைந்து கிரிபத்கொடை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வீதியில் பயணித்த ஒரு சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியை கண்கானிக்கப்பட்டது. குறித்த முச்சக்கர வண்டியை மேலும் சோதித்த போது இந்த கஞ்சா பொதியுடன் மூவரை கைது செய்யப்பட்டது. குறித்த கேரள கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு செல்லும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டதுடன் மேலும் மேற்கொன்ட விசாரணையில் இருவர்கள் அப்பகுதியில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என்பது தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் 29,32 மற்றும் 47 வயதுடைய கெலணி மற்றும் வத்தலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள், முச்சக்கர வண்டி மற்றும் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொடை போலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.