ஆப்கானிஸ்தான் தூதர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கையின் ஆப்கானிஸ்தான் தூதர் அஷ்ரப் ஹய்தாரி அவர்கள் 2019 நவம்பர் 14 ஆம் திகதி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.