இலங்கை மற்றும் சீனா கடற்படைகள் இடையில் நட்பு கூடைப்பந்து போட்டி யொன்று கொழும்பில்

அதிகாரப்பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2019 நவம்பர் 14 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த சீன கடற்படைக்குச் சொந்தமான "ஷு கே ஷென்" எனும் கடற்படை கப்பலின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படை கூடைப்பந்து அணிகளுக்கு இடையே நட்பு கூடைப்பந்து போட்டி யொன்று இன்று (2019 நவம்பர் 16) நடைபெற்றது.

இலங்கை விமானப்படை தலைமையக உட்புற மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டிக்காக இலங்கை கடற்படை கூடைப்பந்து அணி பிரதிநிதித்துவப்படுத்தி கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா கழந்து கொண்டார். இது மிகவும் உற்சாகமான விளையாட்டு நிகழ்வாக மற்றும் இரு நாடுகளின் அணிகளுக்கும் புத்துணர்ச்சியூட்டும் அனுபவமாக உள்ளதுடன் போட்டியின் முடிவில், கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற இரு அணிகளின் வீரர்கள் குழு புகைப்படத்துக்கும் முகம் கொடுத்தார்கள்.

இந் நிகழ்வுக்காக மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட இரு நாடுகளின் மூத்த மற்றும் இளைய கடற்படை அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாலுமிகள் கலந்து கொண்டனர்.