1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேர் கடற்படையால் கைது

இன்று (2019 நவம்பர் 18) காலை நிர்கொழும்பு கடலில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேரை கைது செய்து செய்யப்பட்டனர்.

அதன்படி, நிர்கொழும்பு கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கை மேற்கொண்ட போது சந்தேகத்திற்குரிய ஒரு டிங்கி படகை மேற்கு கடற்படை கட்டளை மற்றும் பொலிஸ் அதிரடிப்படையினர் கவனித்தனர். குறித்த படகை மெலும் ஆய்வு செய்யப்பட்ட போது 54 பொட்டலங்களில் அடங்கிய பீடி இலைகளை காணப்பட்டன. அங்கு குறித்த படகு மற்றும் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த நபர்கள் 32, 52, 58 மற்றும் 63 வயதுடைய இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த ஆண்டில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் மற்றும் நாட்டுக்குள் மேற்கொன்டுள்ள செயல்பாடுகள் மூலம் சுமார் 55 டன் சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.