கடற்படையினரால் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இல்லாது இரால் பிடிப்பதற்காக இரண்டு (02) நபர்கள் கைது

நவம்பர் 18, 2019 அன்று கொழும்பின் கோல் ஃபேஸில் உள்ள கடல்களில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி இரால் பிடித்ததற்காக 02 நபர்களை கடற்படை கைது செய்தது.

அதன்படி, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்கள் இன்றி இரால் பிடித்துக்கொண்டிருந்த இந்த 02 நபர்கள், மேற்கு கடற்படை கட்டளை மூலம், கோல் ஃபேஸ் கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர். கடற்படையினால் ஒரு டிங்கி, ஒரு வெளிப்புற மோட்டார் மற்றும் ஏழு (07) இரால்களும் கைப்பற்றப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர்கள் 23 வயதுக்குற்பட்ட தெஹிவல மற்றும் ரத்மலான பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர்.

02 சந்தேக நபர்கள் டிங்கி, வெளிப்புற மோட்டார், இரால்கள் மற்றும் பிற மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றுடன் துறைமுக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.