சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைகளுடன் ஐந்து (05) நபர்கள் கடற்படையினரால் கைது

2019 நவம்பர் 22 ஆம் திகதி வன்காலை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது சட்டவிரோதமாக பிடிபட்ட கடல் அட்டைகளுடன் ஐந்து (05) நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, செல்லுபடியாகும் மீன்பிடி பத்திரங்கள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்த நபர்கள் வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய சிறப்பு சோதனையின் போது கைது செய்யப்பட்டனர். கடற்படை ஒரு டிங்கி, ஒரு ஓபிஎம், 123 கடல் அட்டைகளும் கைப்பற்றியது.

சந்தேக நபர்கள் 29 முதல் 44 வயது வரை அப்பகுதியில் வசிப்பவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளனர். அவர்களுடன் கடல் அட்டைகளும், டிங்கி, ஓபிஎம் மற்றும் பிற மீன்பிடி சாதனங்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் உதவி மீன்வள இயக்குநரகத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.