இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள 32 ஆமைகளை கடற்படை மீட்டுள்ளது

மன்னார், தல்பாடு மற்றும் மன்னாரில் உள்ள சவுத்பார் இடையே கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது, இறால் பண்ணைகளில் சிக்கிய 32 ஆமைகளை 2019 நவம்பர் 24 அன்று விடுவிக்க முடிந்ததுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளை தல்பாடு மற்றும் சவுத்பார் இடையே கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீனவர்கள் அமைத்த இறால் பண்ணைகளில் சிக்கிய பல ஆமைகளைக் கண்டனர். விலங்குகளின் அவலத்திற்கு விரைவாக பதிலளித்த கடற்படையினர், அந்த பண்ணைகளில் சிக்கிய 32 ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விடுவித்துள்ளனர்.

ஏழு வகையான ஆமைகள் ஆபத்தானவை என பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்து ஆமைகள் இலங்கை கடற்கரையில் காணப்படுகின்றன. இதற்கிடையில், இந்த உயிரினங்களை பாதுகாக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்கு கருத்தாக்கமான ‘நீலா ஹரித சங்கிராமயா’ இன் கீழ் கடற்படை வீரர்கள் பல ஆமை பாதுகாப்பு திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.