சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை இனைந்து 2019 நவம்பர் 26 ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 13 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கடற்படை மற்றும் ஜயவர்தனபுர பொலிஸ் விசேட அதிரடிப் படையின் முதல் குற்றவியல் பிரிவு இனைந்து பத்தரமுல்லை பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது 13 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் கொழும்பு 10 மற்றும் மஹரகம பகுதிகளில் வசிக்கின்ற 33 மற்றும் 43 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளதுடன். இந்த சம்பவம் குறித்து தலங்கமை போலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், இதுபோன்ற சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளை எதிர்த்து கடற்படை வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, இதன் விளைவாக ஏராளமான கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.