Exercise “Blue Whale -2019 கள பயிற்சி வடமேற்கு கடற்படை கட்டளையில்

கடற்படை மரைன் படையணி ஏற்பாடு செய்த Exercise “Blue Whale -2019 கள பயிற்சி 2019 நவம்பர் 27 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தலைமையில் வடமேற்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அதன்படி, ஏழு மாதங்களாக நடைபெற்ற இலங்கை கடற்படையின் மரைன் படையணியின் 5 வது அடிப்படை தகுதிப் பயிற்ச்சியின் இறுதி கட்டமாக இருந்த களப் பயிற்சி, 2019 நவம்பர் 21 முதல் 27 வரை ஏழு நாட்கள் இடம்பெற்றதுடன் இறுதி பயிற்சி 2019 நவம்பர் 26, 27 திகதிகளில் சிலாவதுர காயக்குலி கடற்கரையில் நடைபெற்றது. இந்த கூட்டுப் பயிற்சியில் கடற்படைக் கப்பல்கள், சிறப்பு படகுப் படை, கடற்படை விரைவான அதிரடி படை, செட்ரிக் படகுகள் மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவை இணைந்தன.

இந்நிகழ்வுக்காக வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுஜீவ பெரேரா உட்பட பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.