கடற்படை நடவடிக்கையின் போது பீடி இலைகள் மீட்பு

கடற்படை இன்று (2019 நவம்பர் 29) காலையில் இலுப்புகடவாய் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 303 கிலோ 900 கிராம் பீடி இலைகள் மீட்டது.

கடற்படை முலம் இலுப்புகடவாய் கடற்கரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இந்த பீடி இலைகள் கண்டெடுத்ததுடன் அவை எட்டு பொதிகளாக உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட பீடி இலைகள் யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

கடந்த சில நாட்களாக வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய தேடலின் போது, கைவிடப்பட்ட பீடி இலைகள் ஏராளமானவை மீட்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான கடற்படை நடவடிக்கைகளின் விளைவாக பீடி இலைகளை எடுத்துச் செல்வதை கடத்தல்காரர்கள் விட்டுச் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தவிர்க்க கடற்படை எச்சரிக்கையாக உள்ளதுடன் இப்போது கடற்படை 50 டன்களுக்கும் அதிகமான பீடி இலைகளை பறிமுதல் செய்துள்ளது.