கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்ட பீடி இலை பொட்டலங்கள் கடற்படை கண்டுபிடித்துள்ளது

கடற்படையால் இன்று (2019 டிசம்பர் 02) காலையில் துனுக்காய் பகுதியில் உள்ள இலுப்புகடவாய், சிப்பியாரு கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 297.7 கிலோ கிராம் பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

கடற்படையால் தீவைச் சுற்றியுள்ள கடற்கரையில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலுப்புகடவாய், சிப்பியாரு கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையில் கடற்கரைக்கு அருகில் காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான பல பொட்டலங்களை கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு எட்டு பார்சல்கள் மீட்கப்பட்டுள்ளன, குறித்த பொட்டலங்களை ஆய்வு செய்தபோது பீடி இலைகளின் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலதிக விசாரணைகளுக்காக இந்த பீடி இலைகள் யாழ்ப்பானம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கடந்த காலத்தில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் முலம் பீடி இலைகள் கடத்தலில் ஈடுபட்ட பல கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாரான சட்டவிரொத கடத்தல் நடவடிக்கைகள் தடுக்க கடற்படை தொடர்ந்து விழிப்புடன் உள்ளது.