கடலில் காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவியது

எலும்பு முறிந்து காயமடைந்த ஒரு மீனவரை கடலில் இருந்து கரைக்கு கொண்டு வர இன்று (2019 டிசம்பர் 05) இலங்கை கடற்படை உதவி வழங்கியது.

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் மண்டலத்தைப் பயன்படுத்தும் மீனவர்கள் மற்றும் கடல் சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை கடற்படை, 2019 நவம்பர் 28 ஆம் திகதி பேருவலை மீன்வளத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட 'நாலின் -07' என்ற பல நாள் மீன்பிடிக் கப்பலில் ஒரு மீனவரின் பாதத்தில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரனத்தினால் அவரை கரைக்கு கொண்டு வர இன்று உதவி வழங்கியது

மீன்பிடிக் கப்பலின் உரிமையாளர் அளித்த தகவல்களின் அடிப்படையில், தெற்கு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு விரைவான தாக்குதல் படகை குறித்த இடத்துக்கு அனுப்ப கடற்படை முடிவு செய்தது. காலி கலங்கரை விளக்கிலிருந்து 55 கடல் மைல் தொலைவில் கரடுமுரடான கடலில் விரைவான தாக்குதல் படகில் குழுவினர் காயமடைந்த மீனவரை மீட்டெடுத்து அடிப்படை மருத்துவ உதவிகளை வழங்கி பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்துள்ளனர். அதன்படி, காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நோயாளி மருத்துவ சிகிச்சைக்காக கராபிட்டி போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

இலங்கை கடற்படை நாட்டின் பிராந்திய நீரில் துன்பகரமான மீன்பிடி கப்பல்கள் மற்றும் சமூகங்களுக்கு தொடர்ந்து உதவி வழங்கி வருகிறது, மேலும் எதிர்காலத்தில் இதேபோன்ற சூழ்நிலைகளுக்கு உதவவும் உள்ளூர் மீன்பிடி சமூகங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.