சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் கைது

கொழும்பு பகுதியில் 2019 டிசம்பர் 05 ஆம் திகதி இலங்கை கடற்படை மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறை நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக 04 ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறை உத்தரவுகளை மீறி இந்த ஈட்டி துப்பாக்கிகளை வைத்திருந்ததுடன் அவை விற்பனைக்கு கடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 53 வயதான கொழும்பு 12 பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் துப்பாக்கிகளுடன் கொழும்பில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் துறையிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.