மட்டக்களப்பு பகுதியில் இருந்து தடைசெய்யப்பட்ட 08 மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கடற்படையால் இன்று (2019 டிசம்பர் 07) காலை மட்டக்களப்பு களப்பு பகுதியில் இருந்து 400 அடி நீளமான 08 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கான கடற்படை நடவடிக்கை யொன்று இன்று காலை மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போது இந்த தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்க உள்ளது.