இலங்கையைச் சுற்றியுள்ள அழகிய கடலோர பகுதியை பாதுகாப்பதற்காக இலங்கை கடற்படையின் பங்களிப்பு

இலங்கை கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று 2019 டிசம்பர் 07 ஆம் திகதி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளைப் பாதுகாக்க கடற்படை பல சுற்றுச்சூழல் நட்பு திட்டங்களை மேற்கொண்டுள்ளதுடன் அதிமேதகு மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கருத்தான 'பாதுகாப்பான சுற்றுச்சூழல்' என்ற கருத்தையும் இது மூலம் செயல்படுத்த கடற்படை எதிர்பார்க்கிறது.

அதன்படி, கடற்படையின் மற்றொரு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டமொன்று இவ்வாரு மேற்கொள்ளப்பட்டது. இங்கு யாழ்ப்பாணம், காரைநகர் தீவின் கசுரினா கடற்கரை, மண்டதீவு கடற்கரை மற்றும் திருகோணமலை கடற்படைக் கப்பல் கட்டடம் கடற்கரை ஆகியவை சுத்தம் செய்யப்பட்டன. தென் கடற்கரைகளில் மஹமோதர கடற்கரை, கின்தோட்டை கடற்கரை மற்றும் தங்காலை உள்ள ஒருவெல்ல கடற்கரையையும் சுத்தம் செய்யப்பட்டது.

இயற்கை காரணங்கள் மற்றும் மனித நடவடிக்கைகளால் பெரிதும் மாசுபட்ட கடற்கரைகளை கடற்படை பணியாளர்களின் அர்ப்பணிப்பு காரணமாக அழகிய கடலோர பகுதியாக மாற்ற முடிந்ததுடன் இவ் வேலை திட்டங்களுக்காக கடற்படையினர்கள், மாநில அதிகாரிகள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தல்களில் கீழ், இலங்கையைச் சுற்றியுள்ள கடலோர பகுதியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் அனைத்து கடற்படை கட்டளைகளிலும் நடத்தப்படுகின்றதுடன் இது முலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.


யாழ்ப்பாணம் பகுதியில் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


கிழக்கு கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்


தென் கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டம்