தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையால் கைது

கற்பிட்டி, பல்லியவாசலபாடு பகுதியில் 2019 டிசம்பர் 07 ஆம் திகதி கடற்படையால் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் நபர்கள் கைது செய்ய கடற்படை மேற்கொண்ட நடவடிக்கை யொன்று கற்பிட்டி, பல்லியவாசலபாடு பகுதியில் 2019 டிசம்பர் 07 ஆம் திகதி நடைபெற்றதுடன் அங்கு சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 02 நபர்களை கைது செய்யப்பட்டது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய இரு மீன்பிடி படகுகள் மற்றும் இரு தடைசெய்யப்பட்ட வலைகள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள் 44 வயதான குறித்த பகுதியில் வசிப்பவர்கள் என கண்டரியப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள், மீன்பிடி படகுகள் மற்றும் சட்டவிரோத வலைகள் மேலதிக விசாரணைகளுக்காக புத்தலம் உதவி மீன்வளத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.