நீரில் மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

வெலிகம, கங்தூவ கடலில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க கடற்படை 2019 டிசம்பர் 08 ஆம் திகதி சுழியோடி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அதன் படி மூழ்கிய நபரின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது.

தீவின் எந்தப் பகுதியிலும் மீட்பு மற்றும் உளவு நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படை பங்களிக்கின்றது. அதன் படி இன்று வெலிகம, கங்தூவ கடலில் மூழ்கி இறந்த ஒருவரின் சடலத்தை கண்டுபிடிக்க கடற்படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. ஒருவர் நீரில் மூழ்கியதாக வெலிகம காவல்துறையினரினால் கடற்படை க்கு தெரிவித்துள்ளது. உடனடியாக, கடற்படை சுழியோடி குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியது.

பலியானவரின் சடலம் அவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக சடலம் வெலிகம போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.