ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் திருகோணமலைக்கு வருகை

ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் " டிடி- 102 ஹருசாமே" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (2019 டிசம்பர் 10) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அங்கு ஜப்பானிய கடற்படை கப்பலை கடற்படை மரபுகளுக்கமைய இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

கப்பல் துறைமுகத்துக்கு வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் ஒஷிமா டெருஹிஸா கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் சந்ஜீவ டயஸ் சந்தித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஜப்பானிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கேப்டன் லெப்டினன்ட் ககு புகுவ்ரா கழந்துகொன்டுள்ளார்.

151 மீட்டர் நீளமான " டிடி- 102 ஹருசாமே" கப்பலில் 165 கடற்படை வீரர்களுடன் சுமார் 4,550 டோன்களை எடுத்துச்செல்லக்கூடிய வசதிகளை கொண்டுள்ளது. மூன்று நாள் விஜயத்தை மேற்கொன்டு வந்தடைந்த இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள், புறப்படுவதற்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.

அதன் படி விஜயத்தின் பின் டிசம்பர் 12 ஆம் திகதி குறித்த கப்பல் நாட்டை விட்டு புறப்பட உள்ளது.