இலங்கை கடற்படையின் ‘சுரநிமில’ மற்றும் ‘நன்திமித்ர’ கப்பல்கள் அதன் 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

இலங்கை கடற்படையின் விரைவு தாக்குதல் ஏவுகணை கப்பல்கலான இலங்கை கடற்படை கப்பல் சுரநிமில மற்றும் நன்திமித்ர ஆகிய கப்பல்கள் 2019 டிசம்பர் 09 ஆம் திகதி தங்களுடைய 19 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.

அதன் பிரகாரமாக இலங்கை கடற்படை கப்பல் சுரநிமில கப்பலின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் (நீர் தரம்) சந்ஜீவ பிரேமரத்ன, மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நன்திமித்ர கப்பலின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் (சமிக்ஞைகளை) புத்திக லியநகமகே ஆகியோர் பல நிகழ்வுகள் ஏற்பாடுசெய்துள்ளன. மேலும் கட்டளை அதிகாரிகள் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப பிரிவுகளை ஆய்வு செய்து குழுவினரை உரையாற்றினார்கள்.

கட்டளை அதிகாரிகள் தலைமையில் அனைத்து அதிகாரிகள் மற்றும் கடற்படை வீரர்களின் பங்களிப்புடன், ‘பரகனா’ நிகழ்ச்சியில் வழக்கமான உணவு பங்கேற்புடன் ஆண்டு விழாக்கள் நிறைவடைந்தன.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பல் சுரநிமில 2000 ஆகஸ்ட் 22, அன்றும் இலங்கை கடற்படைக் கப்பல் "நந்திமித்ர" 2000 ஜூலை 2, அன்றும் இஸ்ரேலில் இருந்து இலங்கை கடற்படையில் இணைந்துள்ளதுடன் குறித்த கப்பல்கள் 2000 டிசம்பர் 09 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் ‘சுரநிமில’ மற்றும் ‘நன்திமித்ர’ எனப் பெயரில் அதிகாரமளிக்கப்ட்டன.


இலங்கை கடற்படைக் கப்பல் ‘நந்திமித்ர’


இலங்கை கடற்படைக் கப்பல் ‘சுரனிமில’