இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே கடமையேற்பு

இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே (சமிக்ஞைகளை) 2019 டிசம்பர் 10 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரியான கேப்டன் (ஆயுதங்கள்) டேமியன் பிரனாந்து இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவில் வைத்து புதிய கட்டளை அதிகாரிக்கு கடற்படை பாரம்பரியமாக தனது கடமைகள் ஒப்படைத்துள்ளார். காலி துறைமுக வளாகத்தில் புதிய கப்பல் துறையில் இடம்பெற்ற இன் நிகழ்வில் கேப்டன் (ஆயுதங்கள்) டேமியன் பிரனாந்துவுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய மரியாதை செலுத்தி பிரியாவிடை அளிக்கப்பட்டன.

அதன் பின் புதிய கட்டளை அதிகாரி கேப்டன் (சமிக்ஞைகளை) பிரபாத் ரதுகமகேவுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைய மரியாதை செலுத்தி இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவுக்கு வரவேற்க்கப் பட்டுள்ளது. புதிய கட்டளை அதிகாரி பிரிவு சரிபார்த்த பின் குறித்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந் நிகழ்வுக்காக தென் கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் அருன தனபால கழந்துகொண்டார்.