சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டது

இலங்கை கடற்படையின் நூறு (100) சிரேஷ்ட வீர்ர்களுக்கு ரூபாய் (ரூ .500,000 / =) வட்டி இல்லாத கடன் வசதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடற்படைத் தலைமையகத்தில் 10 ஆம் திகதி டிசம்பர் 2019 அன்று வழங்கப்பட்டது.

கடற்படை நன்மை நிதியத்தால் இந்த கட்ட கடன் வசதிக்காக மொத்தம் 50 மில்லியன் ரூபாய் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்படைக்கு அவர்கள் மேற்கொண்ட நீண்ட சேவையை அங்கீகரிக்கும் விதமாக சிரேஷ்ட வீர்ர்களுக்காக இந்த வட்டி இல்லாத கடன் வசதி தொடங்கப்பட்டது. இப்போது 2660 சிரேஷ்ட வீர்ர்களுக்காக இந்த கடன் வழங்கப்படுள்ளதுடன் எதிர்காலத்தில் அதே கடனை மேலும் 2285 சிரேஷ்ட வீர்ர்களுக்கு வழங்குவதில் முன்னேற்றம் காணப்படுகிறது.