வெற்றிகரமான சுற்றுப்பயணத்திற்குப் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் தாயகம் திரும்பியது

2019 டிசம்பர் 10, அன்று இலங்கை வந்து சேர்ந்த ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் ‘டிடி- 102 ஹருசாமே’ கப்பல் இன்று (2019 டிசம்பர் 12) திருகோணமலை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

அங்கு, கடற்படை மரபுகளின்படி புறப்படும் கப்பலுக்கு இலங்கை கடற்படை மரியதைகளை செலுத்தியதுடன் இந் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் பல மூத்த அதிகாரிகள் கழந்துகொண்டனர்.

இக் கப்பலின் மாலுமிகள் இலங்கையில் தங்கியிருந்தபோது, கடற்படை கப்பல் கட்டடத்திலும், திருகோணமலையின் பல முக்கிய இடங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதுடன் 2019 டிசம்பர் 11 அன்று திருகோணமலை டச் பே கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தில் பங்கேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நட்பை வளர்ப்பதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்திருந்த பல நிகழ்ச்சிகளிலும் கப்பலின் குழுவினர் பங்கேற்றனர்.