வடக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய இளநிலை கடற்படை வீட்டுவசதி கட்டிடம் கடற்படைத் தளபதியால் திறந்து வைப்பு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2019 டிசம்பர் 12, அன்று வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்று மேற்கொண்டார், அங்கு கட்டளை தலைமையகத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடத்தின் முதல் கட்டம் திறந்து வைத்தார்.

இந்த கட்டிடத்தை மூன்று (03) தளங்களில் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் முதல் கட்டத்தின் கீழ், இளநிலை கடற்படையினருக்காக கீழ் தளம் திறந்து வைக்கப்பட்டது. இது கடற்படையினரின் நலனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வுக்காக வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட துறைத் தளபதிகள் மற்றும் வடக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.