ஹெராயினுடன் ஒருவரை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறையினரின் ஒருங்கிணைப்பில் கடற்படை 450mg ஹெராயினுடன் நபரொருலரை மன்னாரில் உள்ள தோத்தவேலி பகுதியில் 2019 டிசம்பர் 12 ஆம் திகதி கைது செய்ததுள்ளது.

தீவில் இருந்து போதைப்பொருள் ஒழிப்பதற்காக கடற்படை மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை, மன்னாரில் உள்ள தோத்தாவேலி பகுதியில், மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் நடத்தப்பட்டது. அதன்படி, சோதனையின்போது சாலையில் நடந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கண்காணிக்கப்பட்டு, அந்த நபரைத் சோதித்ததன் மூலம் ஹெராயின் அவரது வசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 19 வயது மன்னார் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார், மேலும் நபர் மற்றும் ஹெராயின் மேலதிக விசாரணைக்காக மன்னார் போலீசில் ஒப்படைக்கப்பட்டது.