310 கிராம் கேரள கஞ்சா கொண்ட 02 நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

காவல்துறை உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையின்போது கடற்படை, டிசம்பர் 14 அன்று யாழ்ப்பாணத்தின் சாடி கடற்கரை பகுதியில் 310 கிராம் கேரள கஞ்சாவுடன் 02 நபர்களை கைது செய்தது.

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக கடற்படை, சாட்டியின் கடற்கரைப் பகுதியில் காவல்துறையினருடன் இந்த கூட்டுத் நடவடிக்கையை மேற்கொண்டதுடன், சந்தேகநபர்கள் இருவரிடமும் 310 கிராம் கேரள கஞ்சாவைக் கண்டுபிடித்தது. அதன்படி, சந்தேக நபர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிவபுரம் மற்றும் செட்டிபுரம் பகுதிகளைச் சேர்ந்த 42 மற்றும் 45 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கெய்ட்ஸ் காவல்துறை மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறது.