தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய கடமையேற்பு

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய 2019 டிசம்பர் 16 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமை யேற்றினார்.

அங்கு ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவை கடற்படை மரபுகளுக்கமைய தென் கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர். குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் வைத்து கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவுக்கு ஒப்படைத்துள்ளார். மேலும் இதுக்கு முன் ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரிய கடற்படை பணிப்பாளர் கடற்படை நல பதவியில் கடமையாற்றினார்.

மேலும், குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் நொயெல் கலுபோவில தன்னார்வ கடற்படையின் தளபதியாக கடமை யேற்க உள்ளார். கடற்படை அதிகாரிகள் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தினர்.