சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் இன்று (2019 டிசம்பர் 18) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வாவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

வருகை தந்த ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் அவர்களை கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்கப்பட்டதுடன் இச் சந்திப்பு சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகமாக கடமையேற்ற பின் கடற்படை தளபதியுடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பாகும்.

அங்கு புதிய ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் அவர்களுக்கு கடற்படை தளபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.