சுமார் 22 கிலோ கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டுள்ளது

கடற்படையால் 2019 டிசம்பர் 19 ஆம் திகதி கச்சத்தீவின் கரையோரப் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டது

கடற்படை கடலோர மண்டலம் மற்றும் கடலோரப் பகுதியை அடிப்படையாகக் கொண்டு கச்சதீவு கடலோரப் பகுதியில் ஒரு சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அங்கு கரை ஒதுங்கிய 10 பொட்டலங்களை கண்காணித்ததுடன் குறித்த பொட்டலங்கள் சோதனை செய்த போது கிட்டத்தட்ட 22 கிலோகிராம் கஞ்சாவை கடற்படை மீட்டது. குறித்த கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், கடத்தல்காரர்கள் கேரள கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படுவதை கட்டுப்படுத்த கடற்படைக்கு முடிந்தது. அதன்படி, இந்த ஆண்டில் மட்டும் 3 டன்னுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்துள்ளதுடன், சட்டவிரோத கடத்தல் நடவடிக்கையைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.