இலங்கை கடற்படை கப்பல் ‘ருஹுன’ நிருவனம் தனது 48 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடுகிறது

தெற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘ருஹுன’ நிருவனம் தனது 48 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் 2019 டிசம்பர் 18 அன்று கொண்டாடியது.

48 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், நிறுவனத்தின் கட்டளை அதிகாரியும் கப்பலின் தளமும் ஆண்டு விழாவை மிகுந்த மத முக்கியத்துவத்துடன் செய்திருந்தன. அதன்படி, தங்காலை வெல்ல போதிய விஹாரை, புனித பிரான்சிஸ் தேவாலயம் மற்றும் மஸ்ஜித் மொஹிதீன் ஜும்மா மசூதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு மத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும், தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினருடைய பங்களிப்புடன் பல விளையாட்டு நிகழ்ச்சிகள் தங்காலை ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

ஆண்டுவிழாவையொட்டி அன்று மாலை வண்ணமயமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் விளைவாக, ஆண்டு விழாக்கள் பிரமாண்டமான பாணியில் முடிவடைந்தன.