அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 07 நபர்கள் கடற்படையால் கைது

2019 டிசம்பர் 21 ஆம் திகதி காலை மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 07 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நபர்கள் கைது செய்வதுக்காக கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை மன்னார், வங்காலை கடற்கரை பகுதி மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அங்கு, கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான 03 படகுகள் பரிசோதிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதுடன் 984 கடல் அட்டைகள் அங்கு இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. மேலதிக விசாரணையில், மீனவர்கள் செல்லுபடியாகும் அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் 25 முதல் 40 வயதுக்குட்பட்ட மன்னார் வங்காலை பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 03 டிங்கி படகுகள், 03 வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் 984 கடல் அட்டைகள் கடற்படையால் கைது செய்யப்பட்டதுடன் சந்தேகநபர்கள், டிங்கி படகுகள், வெளிப்புற எரிப்பு இயந்திரங்கள் மற்றும் கடல் அட்டைகள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.