திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகள் அதிகாரமலிக்கப்பட்டது

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 36 கடற்படை அதிகாரிகள் இன்று (2019 டிசம்பர் 21) அதிகாரமலிக்கப்பட்டது.

அதன்படி, திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் பயிற்சி பெற்ற 60 வது கேடட் ஆட்சேர்ப்பின் மத்திய அதிகாரிகள் ஆரம்ப பயிற்சி முடிந்ததும் அதிகாரலிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் முதன்மை விருந்தினராக இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் மரியாதைக்குரிய மகா சங்கதேரர்கள் உட்பட அனைத்து மத குருமார்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, துணைத் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் கபில சமரவீர, கிழக்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க, கடற்படை பணிப்பாளர் நாயகங்கள், கடற்படை கட்டளை தளபதிகள், கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியின் தளபதி கொமடோர் பிரசன்ன மஹவிதான, கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திற்கு இணைக்கப்பட்ட கடற்படை மூத்த மற்றும் இலைய அதிகாரிகள், ஆயுதப் படைகள் மற்றும் பொலீஸ் அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் இந்த அதிகாரமலிப்பிற்க்கு கலந்து கொண்டனர்.

பயிற்சி காலத்தில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி, டப்.கே.ஏ பிரியதர்ஷன 60 வது கேடட் ஆட்சேர்ப்பின் சிறந்த மத்திய அதிகாரியின் வாள் மற்றும் கோப்பையை பெற்றார், அதே நேரத்தில் மத்திய அதிகாரி டப்.கே.ஏ பிரியதர்ஷன நீர் கடக்கும் பாடங்களில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ள அதிகாரியாகவும் விருது பெற்றார். அனைத்து பாடங்களிலும் உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்ற கிண்ணம் மத்திய அதிகாரி டப்.ஏ.எஸ் டில்ஷானுக்கு வழங்கப்பட்டது. தொழில்முறை பாடங்களில் அதிக மதிப்பெண்களை பெற்ற அதிகாரியாக ஜே.எம்.கே குமார தெரிவு செய்யப்பட்டார். மிகச் சிறந்த விழையாட்டு வீரருக்கான விருது மத்திய அதிகாரி ஈ.பி.டி.பி பிரியமால் பெற்றார். சிறந்த குறிவைத்த நபர் விருதை மத்திய அதிகாரி கே.ஆர்.ஹப்புவராச்சி பெற்றார்.

அதிகாரிகள் அதிகாரமலிக்கும் விழா கடற்படை கலாச்சார குழுவின் மற்றும் கடற்படை இசைக்குழுவின் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இடம்பெற்றது. மேலும் கடற்படை மரபுகளின்படி மேற்கொள்ளப்பட்ட சூரியனின் சடங்குகளுடன் இந் நிகழ்வு நிரைவடைந்தது.