இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள 12 கடல் ஆமைகளை கடற்படையினால் விடுவிக்கப்பட்டுள்ளது

கடற்படை, தால்பாடு மற்றும் வன்காலை இடையேயான கடல் பகுதியில் ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள 12 கடல் ஆமைகளை (டிசம்பர் 22) விடுவித்துள்ளனர்.

தால்பாடு மற்றும் வான்காலை இடையே கடல் பகுதியில் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு நடவடிக்கையின் போது, மீனவர்கள் அமைத்த இறால் பண்ணைகளில் சிக்கியுள்ள பல கடல் ஆமைகளை வட மத்திய கடற்படை கட்டளை கண்டறிந்தது, மேலும் அந்த பண்ணைகளில் சிக்கியிருந்த 12 கடல் ஆமைகளை மீண்டும் கடலுக்குள் விடுவித்துள்ளனர்.

மேலும், நவம்பர் 24 அன்று அதே கடல் பகுதியில் இறால் பண்ணைகளில் சிக்கிய 32 கடல் ஆமைகளை கடற்படை விடுவித்ததுடன், கடற்படை நடவடிக்கைகளின் போது 09 சந்தர்ப்பங்களில் 188 கிலோவுக்கு மேற்பட்ட கடல் ஆமை இறைச்சி மீட்கப்பட்டது. இந்த சட்டவிரோத செயல் தொடர்பாக கடற்படை 12 சந்தேக நபர்களை கைது செய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

அழிந்துபோகக் கூடிய கடல் ஆமைகளைப் பாதுகாப்பதில் மீன்பிடி சமூகம் அக்கறை செலுத்த வேண்டும் என்று கடற்படை கேட்டுக்கொள்கிறது. ஏழு வகை கடல் ஆமைகள் பட்டியலிடப்பட்டுள்ளன, அவற்றில் ஐந்து வகைகள் இலங்கை கடற்கரையில் காணப்படுகின்றன. இதற்கிடையில், இந்த உயிரினங்களை பாதுகாக்க, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் தொலைநோக்கு கருத்தாக்கமான ‘நீலா ஹரிதா சங்கிராமய’ திட்டத்தின் கீழ் கடற்படை வீரர்கள் பல கடல் ஆமை பாதுகாப்பு திட்டங்களில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.