இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங்கின் இலங்கைக்கான சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுப்பயணமாக வந்திருந்த இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங், 2019 டிசம்பர் 22 அன்று தீவை விட்டு வெளியேறினார்.

இலங்கையில் தனது பயணத்தின் போது, இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் பிரதமர், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்புத் தளபதி, கடற்படைத் தளபதி, ராணுவத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி உட்பட அனைவரையும் சந்தித்தார்.

டிசம்பர் 22 ஆம் திகதி கடற்படை மற்றும் கடல்சார் அகடமியில் ‘மிட்ஷிப்மேன் கமிஷனிங் விழாவில்’ பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அட்மிரல் சிங், விஐபி அறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை சந்தித்த பின்னர் அதே நாளில் மாலை தீவை விட்டு கதுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வெளியேறினார்.