கடற்படையினரால் 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர் கைது

காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் ஒருங்கிணைந்து கடற்படை, டிசம்பர் 23 அன்று யாழ்ப்பாணத்தின் குருநகரில் வைத்து 46.2 கிலோ கிராம் பீடி இலைகளுடன் நபரொருவர் கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளார்.

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது, யாழ்ப்பாணத்தில் உள்ள குருநகரில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கண்டறியப்பட்டார், சந்தேக நபரை விசாரித்த பின்னர், பாதுகாப்பு படையினர் இந்த பீடி இலைகளை 05 சாக்குகளில், அவரது இல்லத்தில் இருந்து கண்டுபிடிக்க முடிந்ததுள்ளது. பின்னர் பீடி இலை தொகை கடற்படை காவலில் எடுக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் 35 வயதான அதே பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளுடன் சந்தேகநபர் கானகேசன்துரை சுங்க அலுவலகத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.